Friday 23 March 2012

கவிஞன்


எண்ணங்களுக்கும் பேனாவிற்குமான வார்த்தை போர்
மொழிக்கும் கவிஞனுக்குமான வார்த்தை யுத்தம்
மன ஓட்டத்தை வென்றிட துடிக்கும் எழுத்தோட்டம்
எழுத்தோட்டதை வென்றிட துடிக்கும் மன ஓட்டம்
முடிவில் எழுத்தையும் மனதையும் வீழ்த்தி
வென்றவன் அவனே ஆகிறான் கவிஞன்...
கவிஞன் அழிவதில்லை கவிதையும் அழிவதில்லை
பாவாக வாழ்கிறான் என்றும் நம் மொழியோடு!!!!

Monday 19 March 2012

காதல் மொழி!!


இதயங்கள் பேசும் அன்பு மொழி!!
இலக்கணங்கள் இல்லா ஆசை மொழி!!
இலக்கியங்கள் பல, தந்தa மொழி!!
இரவுகளில் கனவுகள் பேசும் மொழி!!
உறவுகளில் உணர்வுகள் ஆழ்ந்த மொழி!!
அன்பே நீ பேசும் காதல் மொழி!!

உன் கை பிடித்து


உன் கை பிடித்து நான் நடக்கும் வேலையிலே
உன் விழி பார்வைகளிaல் மின்சாரம் பாயுமோ
உன் கூந்தல் அசைவினிலே தென்றல் வீசுமோ
உன் கொலுசு ஒலி கூட தேனிசை ஆகுமோ

பிறந்தநாள்


விண்மீன்களை தாங்கிய வான்வெளியே...
குளிரினை அருளிய பணிதுளியே...
இருளினை அழகாக்கிய நிலவொளியே...
எனக்கென இன்று நீ பிறந்தாயோ...
என் இதயத்தை உனதாக்கி கொண்டாயோ.

Sunday 18 March 2012

மழை சாரல்

துளி துளியாய் என் மன நிலத்தை வந்து சேர்ந்தாயோ!!
இதய பரப்பில்லே பசுமை பூக்க செய்தாயோ!!
மண்ணான என் வாழ்வில் வாசம் வீச செய்தாயோ!!
அன்பே!! நீயும் மழை சாரலும் ஒன்று தானோ!!

சுகமில்லை

சில்லென்ற காற்றில் ஊஞ்சலாடுவதில் சுகமில்லை...
சாரல் மழையில் நனைவதில் சுகமில்லை...
பௌர்ணமி நிலவொளியை ரசிப்பதில் சுகமில்லை...
அன்பே உன் மடியில் தூங்கும் சுகத்தோடு ஒப்பிடுகையில்!

என்ன மாயம் செய்தாய்


கடந்து வந்த பாதை
முற்களாய் நெருடியது !!
கடக்க போகும் சோலை
பூக்களாய் வருடியது !!

என்னவோ மாயம் செய்து விட்டாய் !!
மனதின் காயம் ஆற்றி விட்டாய் !!
மாயங்கள் செய்தது உன் கண்ணோ !!
தீபங்கள் ஏந்தி வந்த என் பெண்ணோ !!

பெண்பால்

வெண்பா எழுத தெரியாததால் என்
அன்பால் எழுதுகிறேன்
பெண்பாலின் இலக்கணம் நீ என்று

பெண்ணே நீ

தோகை விரித்த மயிலின் அழகும்!
கூவும் குயிலின் காலை கானமும்!
மல்லிகை பூவின் மயக்கும் வாசமும்!
வானிலே தோன்றும் வானவில்லின் நிறமும்!
வண்ணத்து பட்டாம்பூச்சியின் ஈர்க்கும் துடிப்பும்!
ஆய கலைகளின் அளவில்லா நளினமும்!
ஒன்றாய் கண்டேன் உன்னிடம் மட்டும்!
பெண்ணே என் இதயம் உன்னிடம் என்றும்!

இந்தியன், அமெரிக்கன், ஜப்பான்காரன்

ஒரு இந்தியன், அமெரிக்கன், ஜப்பான்காரன் மூவரும் சந்தித்து கொள்கிறார்கள். மிகவும் சகஜமாக பேசி கொண்டிருந்தாங்க. திடீர்னு யாரு உலகத்துலயே பெரிய சாதனை பண்ணவங்கணு ஒரு விவாதம் வந்துருச்சு.

அப்போ,

அமெரிக்கன்: நாங்க தான் முதன் முதலில் பூமியை சுற்றி செயற்கைகோள் விட்டோம்.

இந்தியன்: அய்யய்யோ, அது பூமியை இடிக்கலயா.

அமெரிக்கன்: அட லூசு பயலே, பூமியை சுத்தினா பூமில இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.

ஜப்பான்காரன்: நாங்க தான் முதன் முதலில் நிலவை சுற்றி செயற்கைகோள் விட்டோம்.

இந்தியன்: அய்யோ, அது நிலவை இடிக்கலயா.

ஜப்பான்காரன்: அட முட்டாள் பயலே, நிலவை சுத்தினா நிலவுல இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.

இந்தியன்: நாங்க தான் முதன்முதலா மூக்கால சாப்பிட்டோம்.

அமெரிக்கன்: எப்படி
ஜப்பான்காரன்: எப்படி


இந்தியன்: அட அறிவு கேட்ட நாதாரிகளா, மூக்குலைனா மூக்குள இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.

தேர்வுக்கு எப்படி படிக்கணும்

இந்த தலைப்புல எழுத வேண்டும் என்று எண்ணினாலும், அதை எழுதுவதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லாததால், என்னை சுற்றி இருந்தவர்கள் எப்படி படித்தனர் என்பதை வைத்து எழுதுகிறேன்.

பொதுவாக தேர்வுக்கு தயாராபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். இதில் முதல் பிரிவினர் கடமையே கண்ணாக கருதுபவர்கள். ஆசிரியர் வகுப்பில் நடத்தும் பாடத்தை ஒரு போதும் கவனிக்க மாட்டார்கள். புத்தகங்களை தலைக்கு தலையணையாக மட்டுமே கருதுபவர்கள். இவர்களுக்கு தேர்வு என்றால் மனதில் ஒரு பயமும் இருக்காது, பதற்றமும் இருக்காது. வினாத்தாள் எளிதானது, கடினமானது என்ற யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்கள். இவர்களுள் சிலர் பிட் அடித்தோ, அடுத்தவர்களை பார்த்து காப்பி அடித்தோ தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். தேர்வு முடிவுகளை பற்றியும் இவர்களுக்கு எந்த ஒரு கவலையும் ஏற்பட வாய்ப்பில்லை.

இரண்டாவது பிரிவினர் வாழ்க்கையை ரசித்து வாழ தெரியாதவர்கள். மாணவர் பருவத்தை புத்தகங்களுடனேயே வாழ்ந்து வீணாக்கியவர்கள். வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதே இவர்களுக்காக தான் என்றால் அது மிகையல்ல. அந்த அளவு வகுப்பில் கவனம் செலுத்துவார்கள். அது மட்டுமில்லாது அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுபவர்கள். இவர்களுக்கு தேர்வு என்றாலே ஒரு விதமான பதட்டம் இருக்கும். ஆம், எப்படியாவது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற பதட்டம் இருக்கும் தானே. இவர்களுக்கும் தேர்வு முடிவுகளை பற்றிய கவலை அதிகம் ஏற்பட வாய்ப்பில்லை.

மூன்றாவது பிரிவினர் கொஞ்சம் வித்தியாசம் ஆனவர்கள். எப்பவாவது ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை கவனிப்பார்கள். மற்ற நேரங்களில் பாடங்களை கவனித்து கொண்டிருக்கும் மாணவிகளை கவனித்து கொண்டிருப்பார்கள். தேர்விற்கு முதல் நாள் மட்டுமே இவர்களுக்கு எப்படியாவது படித்து தேர்ச்சி தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். முதல் நாள் உட்கார்ந்து மாங் மாங் என்று படிக்கும் குணம் உடையவர்கள்.

இவர்கள் தேர்வுக்கு தயார் ஆவதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். சிலர் புத்தகத்தை ஒரு கையில் வைத்து கொண்டு இன்னொரு கையால் தலையை கொட்டி கொண்டோ, நெஞ்சில் குத்தி கொண்டோ படிப்பார்கள். இன்னும் சிலர் தாங்கள் படித்ததை காற்றிலேயே எழுதி பார்த்து கொண்டு இருப்பார்கள். இதற்கான காரணத்தை ஒரு முறை நண்பர் ஒருவரிடம் விசாரித்தேன். அப்போது அவர் கூறிய காரணம் கொஞ்சம் வித்தியாசம் ஆனது தான். காற்றில் எழுதி வைத்த வார்த்தைகள் தேர்வு அறையில் இவர்கள் கண்களுக்கு மட்டும் தெரியும் என்று கூறினார்.

இன்னும் சிலர் ஒரு இடத்திலேயே உட்கார மாட்டனர். கையில் புத்தகத்துடன் அங்கும் இங்கும் வலம் வந்து கொண்டிருப்பார்கள். இப்படி மூன்றாம் பிரிவினர் செய்யும் கூத்துகளுக்கு அளவேயில்லை. தேர்வு முடிவுகளை அதிகம் எதிர்பார்ப்பவர்களும் இவர்கள் தான். இவளோ பேசுறியே, இதுல நீ எந்த பிரிவுனு கேக்குறீங்களா? நானும் தேர்விற்கு முதல் நாள் உட்கார்ந்து மாங் மாங் என்று படிக்குற நல்லவனுங்க.

Thursday 15 March 2012

கடவுள் நம்பிக்கை

அன்று எப்படியாவது ‘எது கடவுள்’ என்ற கட்டுரையை எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்தோடும், கையில் ஒரு குவளை காபியோடும் தன் அறைக்குள் நுழைந்தான் சத்குரு.

தனது டைரியை எடுத்து வேக வேகமாக எழுத ஆரம்பித்தான். தன் தெரு முனையில் உள்ள கோவிலில் இருக்கும் பிள்ளையார் தான் கடவுள் என்று எழுத ஆரம்பித்தான். ஆனால் அந்த கோவில் தன் ஊரில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்பதால் அவனால் பிள்ளையார் தான் கடவுள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.

பிறகு உலகில் பலருக்கும் பரிட்சயமான இயேசு கிறிஸ்து தான் கடவுள் என்று எழுத ஆரம்பித்தான். பின்னர் கிறிஸ்துவர்கள் மட்டுமே அவரை கடவுளாக பின்பற்றுகிறார்கள் என்பதால் கிறிஸ்துவையும் கடவுளாக ஏற்க மறுத்தது அவன் மனம்.

இப்படியே சிவன், விஷ்ணு, அல்லா, புத்தர் என்று யாரையும் அவனால் கடவுளாக ஏற்று கொள்ள முடியவில்லை. டைரியின் பக்கங்கள் தான் வீணானது. அவனால் ஒரு வரி கூட எழுத முடியவில்லை.

அப்போது அன்பே கடவுள் என்று எங்கோ படித்த எண்ணம் அவன் மனதில் தோன்றியது. கமலஹாசன் பாணியில் அன்பே சிவம் என்று எழுத ஆரம்பித்தான். திடீரென்று அன்பு என்பது ஒரு உணர்வு தான், அதை எப்படி கடவுளாக நம்புவது என்ற எண்ணமும் அவனுக்கு தோன்றியது.

அப்படியே அறிவு, முயற்சி, உழைப்பு, இயற்கை என்று மனம் எங்கெங்கோ ஓட மூளை அனைத்தையும் நிராகரித்து கொண்டே இருந்தது. இறுதியில் கடவுளே இல்லை என்று எழுத ஆரம்பித்தான். கடவுள் இன்றி கருமூலம் எங்கே என்ற கேள்வி மனதில் தோன்ற, கடவுள் இல்லை என்பதையும் அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை அவனால்.

தான் கொண்டு வந்த காபி அருந்தாமல் ஆறிவிட்டது என்பதால், அந்த குவளையை கையில் எடுத்து கொண்டு தன்னால் இந்த கட்டுரையை எழுத முடியாது என்ற எண்ணத்தோடு அறையில் இருந்து வெளியேறினான் சத்குரு, நம்பிக்கை இல்லாதவனாய்.