Friday 13 April 2012

நந்தன புத்தாண்டு


"மானுடத்திற்கு முன் பிறந்தவளோ
மானுடம் வளர பிறந்தவளோ
சீரும் சிறப்புமாய் வளர்ந்தவளோ
அமிழ்தை பெயராய் கொண்டவளோ

அகமும் புறமும் விளக்கியவளே
அகரத்துடனே தொடங்கியவளே
என்றும் இளமை உடையவளே
மனதில் வீரம் விதைத்தவளே

வள்ளுவனும் பாரதியும்
உன்னை வளர்த்தனரோ
வள்ளுவனும் பாரதியும்
உன்னால் வளர்ந்தனரோ

மெல்லினமாய் வாழும் பிள்ளைகளை
வல்லினமாய் திகழ வைக்க
சித்திரை நன்னாளில் நந்தன
புத்தாண்டு தீர்மானம் கொண்டு வா தாயே"