அன்று மகாபலிபுரம் மிகவும் நெரிசலாகவே இருந்தது. எவ்வளவு
தேடியும் ரகுவுக்கும், சுதாவுக்கும் ஒரு மறைவான (சாரி! சாரி!!) தனிமையான இடம் கிடைக்கவில்லை. இருந்தாலும் விடாம தேடி பிடிச்சு, ஒரு பாறையின் மீது ஏறி அமர்ந்தனர். அப்புறம் என்னங்க!! பாறை மேல
உட்கார்ந்துக்கிட்டு சுட சுட கடலையை வறுத்தாங்க.
கடலை பாட்டுக்க ஒரு பக்கம்
போய்கிட்டு இருக்க இன்னொரு பக்கம் ரகு அந்த பாறையின் மேல் கிடந்த சிறு கற்களை
எடுத்து கீழே வீசிக் கொண்டிருந்தான். கடலை நல்லா கருகிட்டு இருந்துச்சுங்க. திடீர்னு சிவபூஜைல கரடி நுலைஞ்ச மாதிரி 2 இளைஞர்கள் மேல் ஏறி வந்தாங்க. வந்தவர்கள்
நேராக ரகுவை நோக்கி சென்று அவன் சட்டையை பிடித்து பளார்!! பளார்!!! என்று அவன்
கன்னத்தில் அறைந்தனர்.
நிலை தடுமாறிய ரகுவை சுதா தாங்கி பிடித்தாள். பின் சுதா “
அடிங்க!! ஆனா ஏன் அடிக்கிறீங்கனு சொல்லிட்டு அடிங்க “ என்று அந்த இளைஞர்களிடம்
கேட்டாள். ரகு மேலே இருந்து வீசிய கற்கள் அனைத்தும் அவர்கள் மேல் விழுந்தன. அவர்கள் பல முறை கூப்பிட்டும் அது ரகு, சுதாவின் காதுகளில் விழவே இல்லை. காதலுக்கு
கண்கள் மட்டும் தான் இல்லை என்று நினைத்தோம். இப்போது தான் தெரிந்தது காதும் இல்லை
என்று!!!
No comments:
Post a Comment